Showing posts with label தேவனுடைய நாமம். Show all posts
Showing posts with label தேவனுடைய நாமம். Show all posts

Wednesday, April 14, 2010

உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்

     அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே. -கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன், உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன்.
   அவர் நாமம்.. ஆலோசனைக்கர்த்தா.. என்னப்படும். -கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.
   வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா. -நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.
   சமாதானப்பிரபு -அவரே நம்முடைய சமாதான காரணர்.. -இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
   கர்த்தரின் நாமம் பலத்த துருகம், நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான். -சகாயமடையும்படி...  எகிப்துக்குப்போய்,..  அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ! பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார், அவர் அதைக் காத்துக் தப்பப்பண்ணுவார்@ அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.

சங்.9:10, எரே.23:6, சங்.71:16, ஏசாயா.9:6, எலே.10:23, ஏசாயா.9:6, 2தீமோ.1:12, ஏசாயா.9:6, எபே.2:14, ரோமர்5:1, நீதி.18:10, ஏசாயா.31:1,5.