Wednesday, April 14, 2010

உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்

     அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே. -கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன், உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன்.
   அவர் நாமம்.. ஆலோசனைக்கர்த்தா.. என்னப்படும். -கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.
   வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா. -நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.
   சமாதானப்பிரபு -அவரே நம்முடைய சமாதான காரணர்.. -இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
   கர்த்தரின் நாமம் பலத்த துருகம், நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான். -சகாயமடையும்படி...  எகிப்துக்குப்போய்,..  அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ! பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார், அவர் அதைக் காத்துக் தப்பப்பண்ணுவார்@ அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.

சங்.9:10, எரே.23:6, சங்.71:16, ஏசாயா.9:6, எலே.10:23, ஏசாயா.9:6, 2தீமோ.1:12, ஏசாயா.9:6, எபே.2:14, ரோமர்5:1, நீதி.18:10, ஏசாயா.31:1,5.

No comments: