Monday, April 26, 2010

எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது.

   எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற... -கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர், அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது. -ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை, அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்.
  எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.
   எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். -வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.
   கர்த்தர் நீதிசெய்கிற தேவன், அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள். - இவரே நம்முடைய தேவன், இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார், இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம், இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம். -    நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.

சங்.145:15, அப்.17:25, சங்.145:9, மத்.6:26, ரோமர்10:12, சங்.121:1, சங்.123:2, ஏசாயா30:18,  ஏசஙயா25,9, ரோமர்8:25.

No comments: