Saturday, April 24, 2010

நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது, என் ஆத்துமாவைத்தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.

      ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
   பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன், உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன், நீ என்னுடையவன்.-நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.-நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன், உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.-ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே.-மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன்...-தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார், கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.
   அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை,  நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

சங்.86:13, மத்.10:28, ஏசாயா43:1,11,25, சங்.49:7,8, யோபு33:24, எபே.2:4,5, அப்.4:12.

No comments: